சிறப்பு செய்திகள்
முஸ்லிம்களை நசுக்க முயலும் மதத்தீவிரவாதமும் சமூக உணர்வுகளுக்கு எதிரான முஸ்லிம் அரசியல் தலைமைத்துவமும்
குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய மின்சக்தி அமைச்சு நோர்வேயுடன் கலந்துரையாடல்
அமெரிக்க பொஸ்டன் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேக நபர் கொலை
Recent Articles
குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய மின்சக்தி அமைச்சு நோர்வேயுடன் கலந்துரையாடல்
குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான புதிய திட்டமொன்று கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. நோர்வே நாட்டின் உதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் நோர்வே உயர்ஸ்தானிகர் கிரேட் லோஷனுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. அதற்கமைய குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உருவாக்குவதே அரசின் திட்டமாகும். இதற்கு நோர்வே குழுவினரும் பல யோசனைகளை முன்வைத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில்
நாட்டின் பயன்பாட்டுக்கு உகந்த 10 லட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் அபுதாபியிலிருந்து இறக்குமதி
இலங்கையின் பயன்பாட்டிற்கு உகந்த 10 லட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் அபுதாபியிலிருந்து இலங்கைக்கு வருகைதந்து கொண்டிருப்பதாக பெற்றோலிய கைத்தொழிற்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். அதற்கமைய தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட்டு அதன் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தற்சமயம் நாட்டின் பாவனைக்கேற்ப தேவையான அளவிலான எரிபொருள் கையிருப்பிலுள்ளது. எனவே அதிக விலைகொடுத்து எரிபொருள் கொள்வனவு செய்யவேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை. அமெரிக்கா, ஈரான் மீது விடுத்த
வட மாகாணசபைத் தேர்தல் 13 ஆவது திருத்த சட்டத்திற்கமையே நடைபெறும் – அரசாங்கம் உறுதி
வட மாகாணசபைக்கான தேர்தல் 13 ஆவது திருத்த சட்டத்திற்கமைவாகவே நடத்தப்படுமென அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்த சட்டத்திற்கமைவாகவே கடந்த கிழக்க மாகாணசபை தேர்தல்கள் நடைபெற்றன. அதன் பிரகாரமே வடமாகாண சபைக்கான தேர்தலும் நடத்தப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு முடிவுகளை அறிவிக்கும்போதே அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்புக்கமைய 13ஆவது திருத்த சட்டமே தற்போது நடைமுறையிலுள்ளது. அவற்றில் எவ்வித மாற்றமும் கிடையாது.
அமெரிக்க பொஸ்டன் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேக நபர் கொலை
அமெரிக்க பொஸ்டன் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேக நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அந்நாட்டின் புளோரிடா மாநிலத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரிடம் அமெரிக்க புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அவர் தப்பிச்செல்ல முயன்றதைத் தொடர்ந்தே குறித்த நபர்மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த நபர் ஸ்தலத்திலேயே பலியானதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. 27 வயதான குறித்த சந்தேக நபர் பொஸ்டன் குண்டுத்தாக்குதலை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டவர் என
சுகாதாரத்துறையில் திட்டமிடப்பட்ட இலக்குகளை அடைய சர்வதேச ஒத்துழைப்பும் அவசியமென அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு
சுகாதாரத்துறையில் திட்டமிடப்பட்ட இலக்குகளை அடைய சர்வதேச ஒத்துழைப்பும் அவசியமென அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜெனீவா நகரில் இடம்பெறும் 66 ஆவது உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் சுகாதாரம் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டிய யுகம் உருவாகியுள்ளது. இதனால் சர்வதேச சமூகங்களுக்கிடையில் பொதுமக்களை கேந்திரமாக கொண்ட சுகாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென அமைச்சர் ஆலோசனை முன்வைத்துள்ளார். உலகமயமாக்களினதும் தேசிய மட்டத்தினதும் சவாலாக
2013ம் ஆண்டு நிறைவின் போது மண்ணெண்ணெய் விளக்குகளில் கல்வி கற்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி
இவ்வருட நிறைவுடன் மண்ணெண்ணெய் விளக்குகளில் கல்வி கற்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டு நிறைவின் போது நாட்டிலுள்ள சகல வீடுகளுக்கும் மின் வசதி வழங்கப்படுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு நிறைவடையும் போது நாட்டிலுள்ள சகல வீடுகளுக்கும் குடிநீர் வசதி வழங்கப்பட்டிருக்குமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதுவே ஜனாதிபதியின் திட்டமாகும். இதற்கமையவே அரசாங்கம் செயற்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை.
ஈராக்கில் இடம்பெற்ற தொடர் கார்க்குண்டுத் தாக்குதல்களில் 112 பேர் பலி
ஈராக்கில் இடம்பெற்ற தொடர் கார்க்குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. ஈராக்கில் சுன்னி முஸ்லிம் பிரிவினருக்கும், ஷியா முஸ்லிம் பிரிவினருக்குமிடையில் சமய நம்பிக்கையில் காணப்படும் வேறுபாடு குறித்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்றைய தினம் ஈராக் தலைநகர் பாக்தாத், ஷாப், பாஸ்ரா, பலாட் ஆகிய பகுதிகளில், சுன்னி முஸ்லிம் பிரிவினர் அதிகம் வசிக்கும் இடங்களை இலக்கு வைத்த நடத்தப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஈராக்கில்
ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை இடைநிறுத்தும் மனு நிராகரிப்பு
இந்தியன் பிறிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளை இடைநிறுத்துமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்ச்சைகள் நீடிக்கும் நிலையில், போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கைகளை நிராகரித்ததுடன் இந்த விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளை நடாத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.
திரைப்படமாகிறது ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டம்
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடந்த வாரம் டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூப்பிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்ட வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு மலையாளத்தில் ஒரு படம் தயாராக உள்ளது. அந்த படத்துக்கு ‘கிரிக்கெட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மலையாள படத் தயாரிப்பாளர்கள்
மின்சார கட்டண அதிகரிப்புக்கெதிரான வழக்கு; பிரதிவாதிகளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு
நியாயமற்ற வகையில் மின்சாரக் கட்டணங்களை அதிகரித்துள்ளமைக்கு எதிராக மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு இன்று அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இந்த மனுவை ஆராயந்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் பீ.ஏ.ரத்நாயக்க, சத்யா ஹெட்டிகே ஆகிய நீதியரசர்கள் குழாம், ஜூன் மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கை மின்சார சபை, அதன் பொது முகாமையாளர் நிஹால் விக்ரமசிங்க,
