உணவு விஷமடைந்ததன் காரணமாக 466 பேர் வைத்தியசாலையில்


உணவு விசமானதால் பாதிக்கப்பட்ட 466 பேர் இதுவரையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேசத்திலுள்ள திருமண வீடு ஒன்றில் நேற்று நடைபெற்ற மதியநேர விருந்துபசாரம் ஒன்றை அடுத்து, அவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக வயிற்று வலி, வாந்தி, வயிற்றோட்டம் ஆகியவற்றினால் மயக்கமடைய ஆரம்பித்துள்ளதகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அழைக்கபட்டு வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment